
Thiruvotriyur Inscription on Thakkolam War
திருவொற்றியூர் கோவில் கல்வெட்டில் தக்கோலம் போர் பற்றிய முக்கிய செய்தி பொதுக்காலம் 949-ல் நிகழ்ந்த தக்கோலப் போர் முதற் பராந்தகர் ஆட்சியில் சோழர்களுக்கும் கன்னரதேவர் தலைமையில் இராஷ்டிரகூடர்களுக்கும் நிகழ்ந்தது . அப்போரை எதிர்பார்த்துப் பல ஆண்டுக் காலம் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் படையுடன் தங்கியிருந்த சோழ இளவரசர் இராஜாதித்தர் யானைமேலிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார். கன்னரதேவரின் துணைக்கு வந்த பூதுகன் என்ற கங்க அரசர் இராஜாதித்தரின் யானை மேல் தாவியேறி அவரை அழித்ததாகக் கல்வெட்டுகள் பேசுகின்றன. சோழர் படை தோற்றது….